யாழில் குற்றச்செயல் ஒன்றினை மேற்கொள்வதற்காக பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த 3 வாகள், காலணிகள், முகமூடிகள் மற்றும் மேல் அங்கிகள் என்பன நேற்றையதினம் 05.08.2024மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
ஏழாலை மேற்கு , ஏழாலை, புளியங்கிணற்றடி என்ற இடத்தில் உள்ள பற்றைக்குள் இருந்தே மேற்குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.