யாழில் மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவனும் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழில் மனைவி உயிரிழந்த விரத்தியால் கணவனும் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.
புது வீட்டுத்திட்டம், நாவற்குழி, கைதடி பகுதியை சேர்ந்த  மனுவல் சூசைமுத்து (வயது 72) என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார். ஆகையால் அவர் மனைவியை பிரிந்த துயரத்தில் காணப்பட்டார். இந்நிலையில் ,நேற்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews