![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/09/VideoCapture_20240916-181757-818x478.jpg)
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினரால் பிரசார பணிகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் வட்டுக்கோட்டை, சங்கானை, பண்டத்தரிப்பு, காரைநகர், மாதகல் உட்பட்ட பகுதிகளில் பிரசார பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/09/VideoCapture_20240916-181717.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/09/VideoCapture_20240916-181757.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/09/VideoCapture_20240916-181727.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/09/VideoCapture_20240916-181811.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/09/VideoCapture_20240916-181736.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/09/VideoCapture_20240916-181712.jpg)
இதன்பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிகிளை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் , இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிகிளை மகளிர் அணி, இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, வட்டுக்கோட்டை மூளாய் வேரம் பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் தொகுதிக்கிளையின் பிரசாரகூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.