வட்டுக்கோட்டை கிளை ஆதரவு தீர்மானம்; சரவணபவனை நேரில் சந்தித்து பா.அரியநேத்திரன் நன்றி தெரிவிப்பு!

தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகியில் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவரும்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனை கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் (15) ஞாயிறு இரவு தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் நேரில் சந்தித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக இன்று தீர்மானத்தை எடுத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையின் கூட்டமானது, தொகுதிக் கிளையின் தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தமிழ்ப்பொது வேட்பாளர் குறித்தான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்நிலையில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரான அரியநேத்திரன் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையிலேயே தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனை கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று  (15) ஞாயிறு இரவு தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

இதன்போது தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து ஈ.சரவணபவன் வரவேற்று மரியாதை செலுத்தியிருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews