இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தேர்தல் தின கண்காணிப்பு தொடர்பான அறிவித்தல்…!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி தேர்தல் – 2024 கண்காணிப்பு நடவடிக்கையை எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மேற்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின்  அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கும், தேவை ஏற்படின் குறித்த இடத்திற்கு களவிஜயம் மேற்கொள்வதற்கும் ஆணைக்குழுவின் அலுவலர்கள் கடமையிலிருப்பார்கள்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகமும் எதிர்வரும் 21 ஆம் திகதி தேர்தல் கண்காணிப்பு கடமைகளுக்காக திறந்திருக்கும் என்பதுடன் வாக்காளர்கள் தமது வாக்குரிமையினை பயன்படுத்துவதில் ஏதேனும் உரிமை மீறலை எதிர்கொண்டால் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் எம்முடன் தொடர்புகொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றேன்.
021-2222021
070-3654910
த. கனகராஜ்
பிராந்திய இணைப்பாளர்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
யாழ்ப்பாணம்

Recommended For You

About the Author: Editor Elukainews