சிறுமி துஷ்பிரயோகம் செய்த 65 வயதுடைய முதியவர் கைது….!

வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பதின்ம வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
நேற்று மாலை  (24.10.2024) வியாழக்கிழமை  சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவான நிலையில் நீண்ட தேடுதலின் பின் நேற்று (24) இரவு மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயம் பார்த்து பக்கத்து வீட்டில் வசித்த குறித்த நபர் சிறுமியின் வீட்டில் நுழைந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்
பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் சம்பவம் தொடர்பாக சிறுமி கூறியதும்  அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சிறுமியை மீட்டு  யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன்   அதே பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரையும் தேடுதலின் பின் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த மருதங்கேணி பொலிசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews