எல்லை  தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது…!

எல்லை தாண்டி  இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள். இலங்கை கடற்படையால் இன்றிரவு  கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.
இந்தியா தமிழ்நாட்டிலிருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களை  இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகள்  நிறைவடைந்த பின்னர் நீரியல் வளத்துறை  மற்றும் கடற்றொழில் அமைச்சு  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews