யா/தாளையடி றோ.க.த.க பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த  விளையாட்டு போட்டி நேற்று 4/3/2025  பிற்பகல் 1:30  மணியளவில் பாடசாலை முதல்வர் பேரின்பநாதன் ஜெயகாந்தன் தலைமையில்  பொது மைதானத்தில் இடம் பெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான  வெற்றிக்கேடயங்கள், பரிசில்கள் பதக்கங்களை பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டவர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
நிகழ்வின் பிரதம விருந்தினராக
கெப்பிட்டிகொலாவ பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் பிரான்சிஸ் கெனியூட்,
சிறப்பு விருந்தினராக வடமராட்சி கல்வி வலய ஆரம்ப கல்வி ஆலோசகர்
திருமதி.சித்திரகலா வித்தியாபதி,
கெளரவ விருந்தினராக தாளையடி புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை
அருட்பணி ஜஸ்ரின் ஆதர்
பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள், அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews