
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் இராணுவ புலனாய்வுத்துறையின் இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவமும், வல்வெட்டித்துறை போலீசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 38 பொதி கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா எடை கணிக்கப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக வல்வெட்டித்துறை போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.