பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஒதுக்கீட்டிலிருந்து வடமராட்சி கிழக்கில் உதவிகள்…..!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட. நிதியிலிருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள வெண்ணிலா விளையாட்டு கழகத்தின் புனரமைப்பிற்க்காக ஒரு இலட்சம் ரூபாவும்,  வெற்றிலை கேணி சென் செமபஸ்ரியர் விளையாட்டு கழகம், ஆழியவளை
அருணோதயா விளையாட்டு கழகம்,உடுத்துறை
பாரதி விளையாட்டுக் கழகம், நாகர்கோவில் நாகதீபம் விளையாட்டு கழகம் ஆகியவற்றிக்கு தலா ஐம்பதாயிரம்  வீதம் நிதி ஒதுக்கப்பட்டே குறித்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலமையில் நேற்று 27/12/2021  இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.சுரேஸ்குமார்,சி.பிரசாத், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்கள், அதிகாரிகள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews