
யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் தற்போதும் உள்ளதுடன், நாட்டில் ஒமிக்ரோன் பரவல் அபாயமும் காணப்படுகின்றது. எனவே சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய வல்வெட்டித்துறை பட்ட திருவிழா காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படவேண்டும்.
மேற்கண்டவாறு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா ஏற்பாடுகளை கூட நான் தொடர்பு கொண்டு தற்போதைய சூழ்நிலை நடத்த வேண்டாம் என கூறியுள்ளேன். அதனையும் மீறி நிகழ்வை நடத்த முற்படுவார்களாக இருந்தால் வல்வெட்டித்துறை நகரசபை
அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளோம். அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்பதுடன் தேவைப்பட்டால் நீதிமன்றம் மூலமாக இதனை தடுக்க முற்படுவோம் என்றார்.