தனியார் வகுப்புக்கு சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மகளை காணவில்லை..! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்.. |

வவுனியா மகாறம்பை குளத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றய தினம் தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்பவில்லை  என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 18 வயதுடைய உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் தனியார் வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் கடந்த வியாழக்கிழமை காணாமல்போயுள்ளதாக பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பட்டையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், குறித்த மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தோர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 0774935652, 0772432257, 0772608819

ஆகிய தொலைபேசி இலங்களுக்கு அறியத்தருமாறும் பெற்றோர் கோரியுள்ளனர். கொழும்பில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மகளாகிய குறித்த மாணவி வவுனியா நகரப் பகுதியில் உள்ள

பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews