கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி திறப்பு!

புதிதாக அமைக்கப்பட்டுள்ள, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி, நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி, நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு, கட்டடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சின் செயலாளர், நீதிபதிகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், நீதி அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews