வடமராட்சி கடலில் பதட்டம், இந்திய இழுவை படகை சுற்றிவழைத்த வடமராட்சி மீனவர்கள், ஒருவருக்கு காயம், இந்திய படகை விடுவிக்குமாறு அழுத்தம்……!

யாழ்பாணம் வடமராட்சி சக்கோட்டை கடற்பரப்பில் எல்லை தாண்டய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகை  நாற்பது படகுகளில் சென்றவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதில் வடமராட்சி பகுதியில் இருந்து சென்ற ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியன் இழுவை படகை வடமராட்சி மீனவர்கள் கரைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் ஆனால்  இந்திய இழுவை படகை விடுவிக்குமாறு வடமராட்சி மீனவர்களை மிரட்டி வருவதாகவும் தற்போது கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன தலைவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவத்தை உறுதிப்படுத்தினார்கள். வடமராட்சி கடற்கரையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிலேயே குறித்த இந்திய இழுவை படகை வடமராட்சி மீனவர்கள் சுற்றிவளைத்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த வடமராட்சி பகுதிக்கு மீன்பிடி அமைச்சர் நிலமைகள் தொடர்பில் ஆராய சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Recommended For You

About the Author: Editor Elukainews