முல்லைத்தீவு-ஒட்டுசுட்டானில் மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கல்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட 188 பேருக்கு, காணிகளுக்கான அளிப்பு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு, முறுகண்டி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதன் போது, திருமுறுகண்டி, இந்துபுரம், பனிக்கன்குளம், மாங்குளம் கிராமங்களை சேர்ந்த 188 பேருக்கு காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன், கிராம சேவையாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்று, மக்களுக்கான காணி அளிப்பு பத்திரங்களை வழங்கி வைத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews