வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிஸார் இடையூறு..!

ஆளுநர் செயலகத்திற்கு முன் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்கு கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை காலையிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 6 மணிவரை இடம்பெற்ற குறித்த போராட்டத்தில்

வடமாகாண ஆளுநர் போராட்டம் நடத்திய முன்பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநரின் கலந்துரையாடலை ஒளிப்பதிவு செய்யவதற்காக அளுநர் செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாட விடுமாறு

கடமையிலிருந்த பொலிஸாரை ஊடகவியாளர் கேட்டனர். இதன்போது பதிலளித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளே சென்றுவிட்டார் உங்களை அனுமதிக்க முடியாது என பதிலளித்தார். இதனையடுத்து குறித்த விடயம்

ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது தொடர்ந்து ஊடகவியலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews