பழைய முறையில் மாகாணசபை தேர்தல் விரைவில்..!

பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு நாடாளுமன்ற தொிவு குழுவில் இணைக்கம் காணப்பட்டிருப்பதாக தெரிவுக்குழுவின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு நேற்று முன்தினம்  (24) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறைமை நிறுவப்படும் வரை மாகாண சபைகளை பழைய முறைமையிலேயே நடத்தவேண்டும் எனவும்  தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் உரிய தெரிவுக்குழுவை மீண்டும் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்தல்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25% ஆக இருக்க பரிந்துரைப்பதும்,

இளைஞர் பிரதிநிதித்துவத்தை கட்டாய மாக்குவதும் கொள்கையளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட மற்றொரு முன்மொழிவாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews