மாங்குளத்தில் தொடருந்தில் மோதுண்டு 21 வயது யுவதி பலி –

இன்று மதியம் 2 மணியளவில் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் புகையிரத்தில் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாங்குளம் கற்குவாரிப்பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதியே இவ்வாறான தவறான முடிவெடுத்து புகையிரத்தில் பாய்ந்துள்ளார் என அப்பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர் .

21 அகவையுடைய திருச்செல்வம் நிதர்சனா என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் தெரிய வருகையில்,

ஆடைத்தொழில்சாலை ஒன்றில் பணியாற்றி வரும் யுவதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிறிது காலம் வீட்டில் வாழ்ந்த நிலையில், வீட்டில் இருந்து அம்மா வீட்டிற்கு சென்றுவருவதாக சொல்லிவிட்டு சென்ற யுவதி புகையிரத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

யுவதியின் சடலம் மீட்கப்பட்டு மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றார்கள்

Recommended For You

About the Author: admin