வனிதாபிமான போட்டியில் அகில இலங்கை ரீதியில் வவுனியா பெண் ஊடகவியலாளர் தெரிவு.

சமூக சேவையினை முன்னிலைப்படுத்தி அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 9 பெண்களில் வடமாகாணத்திலிருந்து வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த ஊடகவியலாளர் சிவகுமார் திவியா தெரிவாகிய நிலையில் மகளிர் தினமான பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டார்.

இலங்கையின் வனிதாபிமான 2021 ஆம் ஆண்டுக்கான போட்டியில் 10 துறைகளில் 9 மாகாணங்களிலும் பெண்களிடேயே போட்டி இடம்பெற்றது.

இதில் சமூக சேவையில் வட மாகாணத்தில் முதலிடம் பெற்ற ஊடகவியலாளர் சிவகுமார் திவியா அவர்கள் ஏனைய மாகாணங்களில் முதலிடம் பெற்றவர்களுடன் இணைத்து கௌரவிக்கப்பட்டார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு வருடா வருடம் குறித்த வனிதாபிமான போட்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery

Recommended For You

About the Author: admin