நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு…!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினி மற்றும் ரவிச்சந்திரன் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் இரு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் திகதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்போது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Recommended For You

About the Author: admin