சர்வதேச மகளிர் தின நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது…!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்று சமத்துவத்துக்கான நிலையம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துடன் இணைநது ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வு மாவட்ட செயலக தொழில் பயிற்சி நிலைய மண்டபத்தில் நேற்று காலை 10 மணியளவில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாவட்டத்தில் சாதனை பெண்களாக பிரகாசிக்கும் பெண்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து கண்காட்சியும் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: admin