வீட்டுக்குள் புகுந்து வயோதிபர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தி, கத்தி முனையில் கொள்ளை..!

வீட்டுடன் கடை ஒன்றினை நடத்திவரும் வயோதிப தம்பதிகளின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் கத்தி முனையில் அச்சுறுத்தியதுடன் வயோதிபரை தாக்கி காயப்படுத்திவிட்டு 32 பவுண் நகை மற்றும் 7 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் ஒட்டுசுட்டான் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வயோதிபரை மூர்க்கத்தனமாக தாக்கி காயப்படுத்தியதுடன்,  வயோதிப பெண்ணை கத்தி முனையில் அச்சுறுத்தி, கழுத்தை நொித்து சித்திரவதை செய்ததுடன் அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் வைத்திருந்த நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது.

கொள்ளை கும்பலின் தாக்குதலில் காயமடைந்த 60 வயதான வயோதிபர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஐநாவுக்குக் கடிதம் எழுதும் கட்சிகள் ?

Recommended For You

About the Author: admin