இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிகாரி மீது யாழ் ஒருங்கிணைப்பு குழு இணைதலைவர் பாய்ச்சல்!

காரைநகர் மருதபுரம் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை எனவும் அதனை சேவையில் ஈடுபடுத்துமாறு ஏற்கனவே கடந்த காலங்களில் இடம்பெற்ற மீளாய்வுக் குழுக் கூட்டங்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு தெரியப்படுத்திய போதிலும் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக ஆத்திரமடைந்த யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்மீளாய்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரி மீது சீறிப் பாய்ந்தார்.

ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு அதிகாரிகள் இந்தக் கூட்டங்களுக்கு வருகை தந்து செய்கிறோம் செய்கிறோம் என கூறிவிட்டு செல்கிறார்களே தவிர எந்த ஒரு செயல்பாட்டினையும் நீங்கள் செய்யவில்லை எனவும் சீறிப் பாய்ந்தார்

Recommended For You

About the Author: admin