பல்கலைக்கழகத்துக்கு செல்லவுள்ள கலைபீட மாணவர்கள் கௌரவிப்பு!

கிளிநொச்சியில், பல்கலைக்கழகத்துக்கு செல்லவுள்ள கலைபீட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கிளிநொச்சி கூட்டுறவாளர் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை கௌரவித்தார்.
நிகழ்வில் பளை பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், இலங்கை தமிழரசு கட்சியின் மகளிரணியின் பொருளாளர் செல்வரத்தினம் அன்பழகி மற்றும் பொன்சபாவதி, கல்வி நற்பணி மன்றத்தின் தலைவர் இராசதுரை ஜெயசுதர்சன் என பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin