யாழ்.உடுவிலில் வீடு புகுந்து வயோதிபர் மீது வாள்வெட்டு..!

யாழ்.உடுவில் தெற்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டு குழு வீட்டுக்குள் புகுந்து வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது.

இதனால் இடது கையில் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் நாகராசா மணிமாறன் (வயது51) என்றும் வீட்டின் உரிமையாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews