தமிழ் மக்களது காணிகளை அபகரிக்க மாட்டோம் ஜனாதிபதி, ஆனால் நாளை வனஜீவராஜிகள் திணைக்களத்தால் வடமராட்சி கிழக்கு அம்பனில் காணி அபகரிப்பு முயற்சி,…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில்  வனஜீவராசிகள்  திணைக்களத்தினரால் நாலை காணிகள் அபகரிக்கும் முயற்சி ஏற்பாடாகியுள்ளது.
அது தொடர்பில்  அம்பன் கிராம சேவகரால் அம்பன் மக்களை காலை 9:30 மணிக்கு தமது காணிகளுக்கான உறுதிகளுடன் சமுகமளிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சேவகரால்  அறிவிக்கப்பட்ட விடயம்  பின்வருமாறு
எல்லைப் பரப்பிற்குள் வருகின்ற மக்களின்  காணிகளை வனஜீவராசி திணைக்களம் பார்வையிட்டு (காணி, அதற்கான ஆவணங்கள்) என்பவற்றை பார்வையிட்டு மக்களின் காணிகளை தவிர்த்து தமது எல்லையினை வகுப்பதற்காக வனஜவராசி திணைக்களத்தினர்  நாளை வருகை தரவுள்ளனர்.
எனவே வைத்தியசாலை முன்பக்கம் தொடக்கம் தங்கராசா என்பவரது வீடு வரை உள்ள வயல் காணி உரிமையாளர்கள் காலை 9.30 மணிக்கு ஆவணங்களுடன் தயார் நிலையில் நிற்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். என்றுள்ளது.
இதேவேளை கடந்த 25/03 2022 அன்று ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிறக்கும் இடையில் இடம் பெற்ற சந்திப்பில் தமிழ் மக்களின் எந்தவிதமான காணிகளையும் அபகரிக்க மாட்டோம் என ஜனாதிபதியால் உறுதியளித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரனால் சொல்லப்ட்டுள்ள நிலையில் நாளை இவ் அபகரிப்பு இடம் பெறுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews