யாழ்.மீசாலை – அல்லாரை பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவினால் இளைஞன் கைது..!

யாழ்.மீசாலை – அல்லாரை பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் இராணுவ புலனாய்வு பிரிவினால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அல்லாரைப் பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்ட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் சாவகச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews