நாடு முழுவதும் நாளை ஊரடங்கா..? சிரேஸ்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண விளக்கம்… |

நாடு முழுவதும் எதிர்வரும் 3ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஊடரங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை. என பொலிஸ் ஊடக பிரிவு கூறியுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது. இதனையடுத்து குறித்த பகுதியில் தற்காலிகமாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் 3ஆம் திகதியும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வெடிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், எதிர்வரும் 3ஆம் திகதி  ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கான எந்தவொரு தீர்மானமும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews