சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் இவ் விபத்து சம்பவம் நேற்று (4) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த டிப்பர் வாகனம் கிளிநொச்சி பொலிஸாரின் உதவியுடன்  தப்பிச்செல்ல இடம் அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலிஸார் கடமையில் இருந்த போதும் குறித்த டிப்பர் வாகனம் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews