மட்டக்களப்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பெண்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது .

இந்த ஆர்பாட்டமானது மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் ஒன்றுதிரண்ட பெண்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வலையமைப்பு மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் ஒன்றுதிரண்ட பெண்கள் அரிசி பால்மா மின்சாரம் பெற்றோல், மருந்து,பசளை இல்லை ஆனால் ஆட்சியாளர் உங்களுக்கு அனைத்தும் உண்டு , பாசிஷ ஆட்சிவேண்டாம்,மக்கள் ஆட்சிவேண்டும், கோட்டா நாட்டை விட்டு போ , எமது நாட்டை எங்களுக்கு தா, ஊழல் நிறைந்த ஆட்சி இன்றுடன் முடியட்டும். போன்ற கோஷங்களுடன் அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு சுமார் 2 மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews