புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது .

அகிம்ஷா சமூக நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் மற்றும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், பாடசாலையின் ஓய்வுநிலை ஆசிரியர் எஸ்.தயாளனின் பங்களிப்புடனான மாணவர்களுக்கான பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன .

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் பாடசாலை சமூகத்தின் பங்களிப்புடன் அதிபர் கே.பாஸ்கரன் தலைமையில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews