காத்தான்குடி பிரதான வீதி வழியாக ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுப்பு.

எங்களை வாழ விடுங்கள் என்ற கோசத்துடன் மட்டக்களப்பு காத்தான்குடியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று மாலை காத்தான்குடி தெற்கு எல்லையிலிருந்து காத்தான்குடி பிரதான வீதி வழியாக கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியும் இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

காத்தான்குடி பிரதான வீதி வழியாக சென்ற ஆர்ப்பாட்ட பேரணி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்; மண்டபத்துக்கு முன்னால் நிறைவடைந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews