தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு.!

தனமல்வில-உடவலவ வீதியில் முச்சக்கரவண்டியும் கெப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவ இன்று இடம்பெற்றுள்ளதுடன், தந்தை தாய் மற்றும் குழந்தை ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிஷே;ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிவத்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த பதுளை பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தனமல்வில பொலஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews