நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம்- எதிர்க் கட்சி தலைவர்.

மக்களை அழித்து, நாட்டுக்கு அழிவை கொண்டு வந்த ராஜபக்ஷ தலைமுறையும் ராஜபக்ஷ அரசாங்கத்தையும் நிச்சயமாக வீட்டுக்கு அனுப்புவோம் என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்த ஐக்கிய கமத்தொழிலாளர் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் பேரணி தெஹியத்தகண்டி நகரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், ‘வரம்பற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முற்றாக இல்லாமல் ஒழிக்கப்படும். அதனை நிறைவேற்றுவதற்காக மக்கள் ஆசியை வழங்க வேண்டும்.

ஜனாதிபதி பதவியாக இருக்கட்டும், பிரதமர் பதவியாக இருக்கட்டும், அது ஒரு அமைச்சுப் பதவியாக இருக்கட்டும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியாக இருக்கட்டும், இவை அனைத்தும் தங்கள் குடும்ப வயிற்றை நிரப்பிக்கொள்வதற்கான தொழிலாக் கருதிக் கொள்ளக்கூடாது என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews