வீட்டார் கண் முன்னால் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு ஓடிய ஆசாமி..! யாழ்.மானிப்பாயில் சம்பவம்… |

யாழ்.மானிப்பாய் உள்ள வீடொன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வீட்டார் கண் முன்னால் திருடிச் சென்ற சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது.

அராலியில் வசிக்கும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மானிப்பாயில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். அவர்கள் தூக்கத்திலிருந்தவேளை இரவு சத்தம் கேட்டதைத்தொடர்ந்து அவர்கள் எழுந்து பார்த்துள்ளார்கள்.

அப்போது அவரது மோட்டார் சைக்கிளைத் திருடன் திருடிக்கொண்டு செல்வதை அவதானித்துள்ளனர். திருடன் வேகமாகச் சென்றதால் அவர்களால் மோட்டார் சைக்கிளை மீட்க முடியவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews