நிறைமதுபோதையில் பொது இடத்தில் நின்று சண்டித்தனம்..! 4 இராணுவ சிப்பாய்கள் கைது… |

நிறைமதுபோதையில் வீதியில் நின்று சண்டித்தனம் செய்த 4 இராணுவ சிப்பாய்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் திருகோணமலை – கோமரசங்கடவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொது இடத்தில் மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொள்வதுடன்,

சண்டித்தனம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த 4 இராணுவ சிப்பாய்களையும் கைது செய்தனர்.

கைதானவர்கள் கரக்கஹவெவ பகுதியைச் சேர்ந்த 25 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews