ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு…!

கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கல்விவலய பாடசாலைகளிலும் பாடசாலை அதிபர்கள் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்விவலயத்தின் மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் எஸ் .சதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற தரம் ஒன்றுக்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கோட்டக்கல்வி அதிகாரி இ .ரவிசந்திரா கலந்துகொண்டார்.

கல்லூரியின் தரம் இரண்டு மாணவர்களினால் தரம் ஒன்றுக்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்வில் கல்லூரி பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews