கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை வன்செயல் தொடர்பாக 20 பொலிஸ் அதிகாரிகள் கொண்ட விசாரணை குழு நியமனம்..!

கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 20 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மூவர் கொண்ட விசேட குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews