யாழ்.மாவட்டத்தில் மே மாதம் 1ம் திகதி தொடக்கம் பால் விலை அதிகரிக்கப்படுகிறது.!

யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி தொடக்கம் ஒரு லீற்றர் பசுப்பாலின் விலை 10 ரூபாயினால் உயர்த்தப்படும். என யாழ்.மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் (யாழ்கோ) அறிவித்திருக்கின்றது. 

கால்நடைத் தீவன விலை மற்றும் பராமரிப்புச் செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் பால் உற்பத்தி செலவுக்கு ஏற்படும் செலவினை ஈடுசெய்யமுடியாமல் சிரமப்படும் பண்ணையாளர்களினைப் பாதுகாக்க இவ்வாறு விலை அதிகரிக்கப்படவுள்ளது.  

விலையதிகரிப்பின் பிரகாரம் எதிர்வரும் முதலாம் திகதி ஒரு லீற்றர் பசுப்பால் 140 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

பண்ணையாளர்களிடமிருந்து ஒரு லீற்றர் பால் 121 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபை முடிவெடுத்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews