G.C.E A/L, O/L மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

முன்பே திட்டமிட்டதன்படி க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரணதரம், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். மே மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை சாதாரண தரப்பரீட்சைகளும்,

தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் அக்டோபர் 16ஆம் திகதி இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அதேபோல், 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும்

கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews