கப்பம் கொடுக்க மறுத்ததால் வர்த்தகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 4 பேர் கைது..!

கப்பம் கொடுக்க மறுத்ததால் வர்த்தகர் ஒருவரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய 4 பேர் குற்றப் புலனாய்வுத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க – ஹீனயட்டியன பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்கள் 32, 37, 38 மற்றும் 42 வயதான கொட்டுகொட மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும் குறித்த நபர்களிடமிருந்து உள்நாட்டு துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கபட்ட 2 கைத்துப்பாக்கிகள், கைக்குண்டு மற்றும் ஹெரோயின் என்பனவும் மீட்கப்பட்டது.

சந்தேகநபர்களை விசாரணைக்குட்படுத்தியதில் அவர்கள் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் சர்வதேச குழு ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்பதும்,

வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டமையும் தொியவந்துள்ளது. கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews