
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.


ஏ9 வீதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கப் ரக வாகனத்துடன் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த உடுத்துற வடக்கு தாளையடி பகுதியை சேர்ந்த நாகேந்திரன் ஜெகன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.