விடுதலை புலிகளின் காலத்தில் இப்படி நடந்ததில்லை! மக்கள் விஷயம்.

மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் சில காலமாக போதை கடத்தல்காரரால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டு வந்துள்ளது.
கட்டைக்காடு பகுதியில் பல்வேறு போதைபொருள்களை கடத்தி விற்பனை செய்து வரும் நபர் ஒருவரால் கிராம மக்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் என பலரும் தாக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்தும் குறித்த நபரை இதுவரையில் பொலீசாரத கைது செய்யவில்லை எனவும்,  நேற்று குறித்த நபரிடம் வேறு முறைப்பாடு தொடர்பாக விசாரணைக்காக வந்த மருதங்கேணி பொலிசார் இருவர் லஞ்ச பணம் வாங்குவதை சிறுமி  ஒருவர் அவதானித்த நிலையில் நேற்று (28) இரவு  குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற குறித்த போதைபொருள் கடத்தல் காரர் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்துள்ளார்.
இன்று காலை (29)பெண் ஒருவரையும் தாக்கியுள்ளார். சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசாருக்கு தெரிவித்த போது லஞ்சமாக பணம் வாங்கிய பொலிசாரே வந்துள்ளனர். இதனை அவதானித்த கிராம மக்கள் குறித்த பொலிசாரிடம் வாக்குமூலம்  பெற்று பணம் வாங்கியதை உறுதி செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews