ரம்புக்கனை சம்பவத்தில் 15 வயது சிறுவன் மீதும் துப்பாக்கிப் பிரயோகம்.

ரம்புக்கனையில் இடம்பெற்ற கலவரத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 15 வயது சிறுவன் ஒருவரும் துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அறிக்கை கோருவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ரம்புக்கனையில் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews