நம்பிக்கையில்லா தீர்மானம்; எதிர்க்கட்சிகள் ஆலோசனை – சுமந்திரனும் பங்கேற்பு!

ஜனாதிபதி, அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் கட்சிகள் கூடி ஆராய்ந்தன. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம். ஏ. சுமந்திரனும் பங்கேற்றார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழாமும் பங்கேற்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews