பொருளாதார நெருக்கடியை தீர்க்க சுமார் 2 வருடங்களுக்கும் அதிகமாக செல்லும் – நிதி அமைச்சர் –

நாட்டின் பிரச்சினையை ஒரு மாத்தில் தீர்க்க முடியும் என கூறினால் நான் பைத்தியகாரன் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (04) விசேட உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க சுமார் 2 வருடங்களுக்கும் அதிகமாக செல்லும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
2 வருடங்களில் இந்த பிரச்சினையை தீர்ப்பதா அல்லது 5 முதல் 10 வருடங்கள் வரை இதனை நீடிப்பதா என்பது தொடர்பில் நாம் அனைவரினதும் கையில்தான் உள்ளது.

மேலும், இலங்கையின் தற்போதைய வௌிநாட்டு பணப்புழக்கம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கூட இல்லை என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வரி அதிகரிக்க வேண்டிய காலத்தில் நாம் அதனை குறைத்து பிழை செய்துள்ளதாக அமைச்சர் பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews