தாழ்வுப்பாடு கடலில் வைத்து 12 பேர் கடற்படையினரால் கைது! –

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக, இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்களாக 14 பேரை, தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள், மன்னாரைச் சேர்ந்த படகோட்டிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 பேரும் இன்று காலை 5 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின் இரண்டு படகோட்டிகள் உள்ளடங்களாக 14 பேரும், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews