நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அறிவிக்கப்பட்டபோதும் கிளிநொச்சியில் ஓரளவு சாதாரண நிலைமை….!

நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்டபோதும்  கிளிநொச்சியில் ஓரளவு சாதாரண நிலையை அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகள், கிளிநொச்சி சேவைச் சந்தை மற்றும் தபால் நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளன.
இதே வேளை நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று திறக்கப்பட்டுள்ளதுடன் அரச, தனியார் பேருந்து சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று இயங்குகின்றமையை அவதானிக்க முடிவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews