பா.இரகுவரன் எழுதிய தும்பளை மேற்கு சந்திரப் பரமானந்தர் வம்சம், நூல் வெளியீடு….!

பா.இரகுவரன் எழுதிய தும்பளை மேற்கு சந்திரப் பரமானந்தர் வம்சம், சித்த ஆயர்வேத வைத்தியம் சோதிடம், வானியல் பரம்பரையினர் எனும் நூல் வெளியீட்டு விழா பருத்தித்துறை  புலோலி வடக்கு ஞான சம்மந்தர் கலைமன்ற அரங்கில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர் இ.பாலேந்திரா தலமையில் மங்கல விளக் கேற்றலுடன் நேற்று இடம் பெற்றது
இதில் மங்கல விளக்குகளை நிகழ்வில் சிறப்பு விருந்நினர்களாக கலந்து கொண்டிருந்த திருமதி திருமதி செல்வமலர் சுந்தரேசன், திருமதி. சுப்பிரமணியம், திருமதி சிவகுமாரன், செல்வி ஏரம்பமூர்த்தி திருமதி சுகிர்தமணி அழகரட்ணம்,
திருமதி வி.பஞ்சாட்சரம்,
பிரதம விருந்தினர் சித்த வைத்தியர் K.K.யோகநாதன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து  ஆசி உரைகளை வைத்திய கலாநிதி M.K.முருகானந்தன்,  பருத்தித்துறை நகரசபை தவிசாளர் கலாபூசணம் யோ.இருதயராசா,  ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து வாழ்த்துரைகளை ஆங்கில பாட ஓயவு நிலை உதவி கல்வி பணிப்பாளர் ச.சுந்தரமூர்த்தி,
ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி சேதுபதி சிவகுமாரன்,
ஆக்கியோர் நிகழ்த்தியதுடன் வரவேற்புரையை ஞான சம்மந்தர் கலை மன்றத்தை சேர்ந்த திருமதி ஸ்கந்தவாணி சிறீதர் நிகழ்தினார்.
அறிமுகவுரையினை ஓய்வு நிலை அதிபர் இ.இராகவன் நிகழ்த்தினார்.
இதில் முதல் பிரதியை வெளியீட்டு வைக்க பருத்தித்துறை நீதிமன்ற கணக்கிட்டு உதவியாளர் க.கௌரீசன் பெற்றுக் கொண்டார்
தொடர்ந்து கருத்துரைகளை  பருத்தித்துறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் தி.கார்த்திகேயன், சட்டத்தரணி தி.சந்திரசேகரன், வட இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை ஆசிரியை ஏ.வரலட்சுமி ஆகியோர் நிகழ்த்தினர்.
இதில்  நிறைவுரையினை நூலாசிரியர் பா.இரகுவரன் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கிராம மக்கள், ஞான சம்மந்தர் கலைமன்றம் நிர்வாகிகள், மாணவர்கள், பருத்தித்துறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் தி.கார்த்திகேயன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் செல்வி ஞானசுகுணா, மற்றும் நலன் விரும்பிகள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews