
இந்திய கடன் உதவியின் கீழ் மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
எரிபொருளை ஏற்றிச் வந்த கப்பல் நேற்று பிற்பகல் நாட்டை வந்தடைந்ததாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல், டீசல் மற்றும் சுப்பர் டீசல் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.